Category Archives: தியான லிங்கம்

பச்சைக் கலரு ஜிங்குச்சா!!

ஜெமினி மேம்பாலத்தின் அருகில் இருக்கும் அமெரிக்கன் கான்ஸுலேட் உள்ளே போகும்போதெல்லாம் அதிசயப்பட்டிருக்கிறேன். ஒரே ஒரு தடுப்புச் சுவர் தாண்டி புகையும் பரபரப்புமான வாகனப் பேரிரைச்சலில் அமைதியான பசுமையான ஒரு சூழ் நிலை அங்கே நிலவும். அமெரிக்கா காரன் மூளையே மூளைதான் என்று நினைத்ததுண்டு. 
எதிரிலேயே ட்ரைவ் இன் ஹோட்டல் இருந்தாலும் பல்வேறு மார்கெட்டிங் மக்களின் சலசலப்பான் நிறைந்து வழியும் அந்த இடம் பெரிய மரங்களுடன் நிறைய நிழல்களுடன் சூழ் நிலை ரசிக்க இயலாது உண்வு ருசிக்காகவும் ஒரு சந்திப்பின் இடமாகவே நின்றுவிட்டது. உட்லண்ஸ் மூடப்பட்டு அங்கே பூங்கா ஒன்று வரப்போகிறது என்று கேள்விப்பட்டதும் வேலை நிமித்தம் உட்லன்ஸில் பல சந்திப்புகளை நிகழ்த்திய என்னைப் போன்றவர்களுக்கு அது பேரதிர்ச்சிதான். குறிப்பாக நிறைய மார்கெட்டிங் மக்களுக்கு அது மிக முக்கியமான மீட்டிங் பாயிண்ட். உட்லண்ஸ் பூட்டியபிறகு அந்த இடத்தையே நான் பார்க்காமல் கடந்துவிடுவேன். ஜனவரியில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோதுதான் எதேச்சையாகப் பார்க்க நேர்ந்து செம்மொழிப் பூங்காவென ஆகியிருப்பது கண்டு சரி உள்ளே போய் பார்த்துவிடலாமென்று சென்றால் ஒரு பெரிய ஆச்சர்யம். மிக அற்புதமான அழகான இடமாக அது மாறி இருந்ததுதான். இம்மாதிரியான ஒரு இடத்தில் இப்படி ஒரு பூங்கா என்பது பெரிய விஷயம். மெதுவாய் ஒரு நடை செல்லலாம். அமைதியாய் ஒரு புத்தகம் படிக்கலாம், வெறுமனே மனிதர்களையோ செடிகளையோ பார்த்துக்கொண்டிருக்கலாம் அவ்வளவு அழகான ஒரு சூழ் நிலை.

 ஆனாலும் பெரிய குறைகள் இருக்கத்தான் செய்கிறது, எல்லா செடி, மர வகைகளுக்கு பெயர் பலகைகள் எழுதப் படவில்லை. கள்ளிச் செடிகளில் ஐ லவ் யூ என்று எழுதுபவர்களுக்கு 6 மாத கடும் காவல் தண்டனையே தரலாம், வாசனைச் செடிகளைக் கொண்ட ஒரு தோட்டத்தில் என்ன என்ன செடிகள் இருக்கின்றது என்பதே தெரியவில்லை. வெளி நாட்டு அழகு செடிகளோடு நமது பாரம்பர்ய மூலிகைச் செடிகளும் வளர்க்கலாம், குறைந்த பட்சம் அரசாங்கமே அங்கே ஒரு நர்சரி வைத்து செடிகளை விற்பனை செய்யலாம். மக்களுக்கு இயற்கை மேலும் மரங்களின் மேலும் ஒரு ப்ரேமை உண்டாகும். நல்லதொரு மழை நாளில் அங்கே இருக்க ஆவல்:)) நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக சென்று வாருங்கள். மேலதிக புகைப் படங்கள் நண்பர் சுகுமார் சுவாமி நாதனின் வலை மனையில்.
சமீபத்தில் கோவை சென்ற போது ஈஷா யோக மையம்/தியான லிங்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மிக அற்புதமான சூழலில் அமைந்த இந்த இடத்தில் லிங்க பைரவி என்ற அம்மனையும், 20 அடி ஆழத்திற்கு மேல் உள்ள சதுர வடிவ கிணறு போன்ற அமைப்பில் ஒரு பாதரச லிங்கத்தையும், தூண்கள் இல்லாத மிகப் பெரிய கூரையின் நடுவில் தியான லிங்கத்தையும் அமைத்திருக்கிறார்கள். மிக அமைதியான சூழ் நிலை, முக்கியமாக தியான லிங்க அமைப்பிற்குள் எவ்வளவு சிறிய சப்தமும் மிகப் பெரிய ஒலி அதிர்வைத் தருகிறது. அந்த கட்டிட அமைப்பு மிக அற்புதம். 

மிகப் பெரிய காளையின் சிலை ஒன்றும் வைத்திருக்கிறார்கள். பாரம்பரியக் கோவில்கள் அமைப்பு ஒரு வகை என்றால் இது போன்ற கார்பொரேட் கோவில்களின் அமைப்பு வேறு விதம். கண்களின் காட்சியே கற்பனையின் உணவென்பதால் எல்லாம் மாயை உள்ளே சென்று ஆக்கிரமித்து பிரமிப்பைத் தந்த மாயையே உன்னதமென்கிறது மனது. அந்த வகையில் இந்த இடம் மீண்டும் வரத்தூண்டும் ஒரு இடம் :)) குறிப்பிட்ட மதமில்லாது யார் வேண்டுமானாலும் வரலாம் உணரலாம் என்று இங்கே அறிவித்திருப்பதால் கோவை செல்லும்போது ஒரு முறை அந்த சூழலை அனுபவித்து விட்டு வாருங்கள். 
கோவை சென்றபோது வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கும் சென்று சில செடிகள் விதைகள் வாங்கி வந்தேன். மிகப் பெரிய பல ஏக்கர் பரந்த இடத்தில் சிறப்பான பராமரிப்புடன் இருக்கிறது. திசு வளர்ப்பிலான வாழைக் கன்றுகள் விற்பனை செய்கிறார்கள். வாழைத் தோட்டங்களில் மிகச் சிறப்பாக விளையும் வாழையின் கன்றிலிருந்து திசு வளர்ப்பு மூலம் நூற்றுக்கணக்கான கன்றுகள் டூப்ளிகேட் செய்யப் படுகின்றன இத்தனை சீப்பு கேரண்டி என்று சொல்லி விற்கப் படுகிறது. தென்னை போன்ற சில மர வகைகள் தவிர்த்து பிறவற்றை இது போன்று காப்பி செய்ய இயலும் என்று ஒரு தனியார் திசு ஆராய்ச்சி கழக உரிமையாளரிடம் பேசியபோது தெரிந்துகொண்டேன். அவர்களின் கன்றுகளை வாங்கி பெரிய குலைகள் தள்ளிய மரங்களுடன் விவசாயிகள் நிற்கும் புகைப்படங்களைக் காண்பித்தார். எல்லாம் இயற்கை விவசாயமா என்றேன், நோ நோ பூச்சி மருந்துதான் என்றார் :((
வால்பையன் அருண் நடத்தும் ஹோட்டலிலுக்குச் சென்று அவரையும் பிலாலையும் சந்தித்தேன். திருப்பூரில் ஜோதிஜி அவர்களைச் சந்திக்க முயன்றும் என்னுடைய மகனின் உடல் நிலை காரணம் சந்திக்க இயலாது போய்விட்டது, குடும்ப பாரங்கள் இல்லாது கோவை, திருப்பூர், ஈரோடு ஒரு ரவுண்டு அடிக்க வேண்டும். :))
வீட்டில் காய்கறித்தோட்டம் போடுவதிலும் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆறு பேர் குடும்பத்திற்கு 4 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ அவரைக்காய், 2 கிலோ பாவக்காய், 6 கிலோ சேப்பங்கிழங்கு, 1 கிலோ முள்ளங்கி, முள்ளு கத்தரிக்காய், எண்ணெய் கத்தரிக்காய், சிகப்பு தண்டு கீரை, அரைக் கீரை  கிடைத்தால் என்ன செய்வது? :)) 
                                                          முதல் அறுவடை!
பரீட்சார்த்த முறையில் பீட்ரூட்டும் முட்டைக் கோஸும் ( செம்மொழிப் பூங்காவிலேயே விளையிதுங்க!!) போட்டிருக்கிறேன். பார்க்கலாம்.:))